Friday, December 21, 2018

உள்ளம் புகுந்து குளிர்ந்து

“மணல் நதி" என்று ஒரு நாவல் . திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதியது. காசி/கயாப் பற்றியும் சிரார்த்தம் செய்வதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொல்லும் அருமையான நாவல். திரு.பாலகுமாரன் அவர்கள் காசி/கயாக்கே நம்மை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் காட்டியிருக்கிறார். இதே போல் ஆழமான விஷயங்களை இனி யார் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த நாவலில் ஒரு இடத்தில் சீனிவாசன்(பாலகுமாரன் தன்னை சீனிவாசன் என்று அழைத்துக் கொள்வார்) என்பவர் புத்தர் ஞானம் பெற்ற இடத்திற்குச் செல்வா. அங்கு வஜ்ராசத்தில் அமர்ந்திருக்கும் புத்தரைப் பார்த்து திகைத்து நிற்பார். அவரின் திகைப்பு, பிரமிப்பு எல்லாவற்றையும் எழுத்தில் படித்துக் கொண்டேவரும்போது திடீரென்று “கிடந்தவாறு எழுந்து நின்று பேசியது" என்ற ஒரு வரி வந்தது. அட....இது திருமழிசை ஆழ்வாருடைய பாட்டு போல் இருக்கிறதே என்று நினைத்து முடிப்பதற்குள், அடுத்த வரி “கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே ....” என்று இருந்ததைப் படித்தவுடன்..... ஓரே பூரிப்பு, ஆராவாரம், சந்தோஷம்....காசியைப் பற்றியும், கயாவைப் பற்றியும் படித்துக் கொண்டிருக்கும் போது....எங்கிருந்து வந்தார் இந்த குடந்தை கேசவன்....சரி, வரட்டும்...அதற்கென்ன இத்தனை சந்தோஷம்......தெரியவில்லை....அந்த வரியை விட்டு கண்ணும் நகரவில்லை....மனமும் நகரவில்லை....ஏதோ ஒரு கதையில் எப்படியோ நுழைந்து.....திக்குமுக்காடச் செய்து.....அட, இது தான் உள்ளம் புகுந்து குளிர்ந்தா?






No comments:

Post a Comment